Monthly Archives: December 2025

பரப்புரை

மனிதர்களிடம் பகுத்தறிவு தோன்றியதற்கு அடிப்படைக் காரணம் என்பது உண்மையைக் கண்டறிவதற்கு அல்ல, மாறாக தனது நம்பிக்கைகளையும் செயல்களையும் நியாயப் படுத்துவதற்கும், மற்றவர்களை நம்ப வைப்பதற்கும் உருவானது என்கிறார் ஆய்வாளர் சுபெர்பர் (Sperber). சுருக்கமாக சொன்னால் பகுத்தறிவு நம்மை ஒரு வக்கீல் ஆக்குவதற்கு உருவானது, அறிவியலாளர் ஆக்குவதற்கல்ல. அறிவியல் என்பது ஒரு பக்கவிளைவே (side effect). இதனால்தான் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

சடங்குநிலையும் உருமாற்றமும்

தமிழ் சமூகத்தின் இன்றைய நிலையை சடங்கு நிலை என்று இடர்னர் (Victor-Turner ) தத்துவத்தின்படி கூறலாம். இது ஒரு ஆபத்தான கட்டம். இந்த கட்டத்தை சரியாகக் கடந்தால் சிறப்பான எதிர்காலம் அமையும், இல்லையென்றால் மீண்டும் அழிவுகளை சந்திக்கவேண்டி வரும். இக்கட்டுரையின் நோக்கம் என்பது சடங்கு நிலையை விளக்கி எவ்வாறு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவது என்பதே. சடங்குநிலை … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

உள்ளக்குமுறல், அகம்-புறம் சமநிலை, வீரன்-ஞானி

கார்ல் யுங்கு தத்துவத்தின் படி வீரன் மறைந்த பின்னர், ஒரு சமூகம் ஆபத்தான கட்டத்தில் இருக்கும். அப்பொழுது தீர்க்கமுடியாத கோபம் , ஆற்றல், வெறி இருக்கும். இதை “shadow energy” என்கிறார் யுங்கு. இதை “சமூக உள்ளக்குமுறல்” என்று மொழி பெயர்க்கலாம். ஈழப் பேரழிவின் பின்னர் தொன்றிய மனநிலையை இது பிரதிபலிக்கிறது. ஒரு சமூகம் இந்த … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

வீரனுக்குப் பிறகு ஞானி— தமிழ்சமூகத்தின் உளவியல் நிலை, அகமும் புறமும், எதிர்காலம்

( குறிப்பு: இது முழுக்க முழுக்க chat-gpt செய்யறிவு (AI ) எழுதிய கட்டுரை. நான் தேவையில்லாத சிலவற்றை நீக்கியிருக்கிறேன். எதையும் கூட்டவில்லை. மிக முக்கியமான கட்டுரை. ) ஒரு சமூகம் எப்போது வீழ்ச்சியடைகிறது என்று நாம் பொதுவாக அரசியலைக் குற்றம் சொல்கிறோம். அல்லது பொருளாதாரத்தைச் சொல்கிறோம். அல்லது வெளிநாட்டு சதி, அடக்குமுறை, தோல்வி, போர் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

புனிதம்-6 : அடிமை எறும்புகள்

எறும்புகள் நண்பனா எதிரியா என்பதை வேதியல் பிரமோன்கள் மூலம் கண்டுபிடிக்கிறன. ஒரு கூட்டில் உள்ள அனைத்து எறும்புகளும் ஒரே பிரமோன்களை கொண்டுள்ளன. அதன் மூலமே அவை ஒத்துழைத்து செயல்படுகின்றன. பாலியர்க்கசு (polyergus) என்ற எறும்புவகை மற்ற இன எறும்புகளை அடிமைப் படுத்தும் தன்மை கொண்டது. அது என்ன செய்யும் என்றால், முதலில் பாலி அர்க்கசு ராணி … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

கிரேக்க மாவீரர் நாளும் உரையும் – ஒரு ஒப்பீடு

உலகின் முதன் முறையாக மாவீரர்நாள் என்று உருவாக்கி மாவீரர் உரை ஆற்றியவர்கள் யார் என்று பார்த்தால் அதுவும் பண்டைய கிரேக்கத்தில் போய்தான் நிற்கிறது. ஏதென்சு நாட்டில் வருட இறுதியில் ( திசம்பர்) வருடா வருடம் மாவீரர் நாள் நடத்தப்பட்டது. கிரேக்கத் தலைவர்கள் ஆற்றிய மாவீரர் உரைகளில் ஒரே ஒரு உரை மட்டுமே காலத்தால் அழியாமல் வந்து … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

சகோதரப்போர்

civil war என்பதை உள்நாட்டுப் போர் என்று மொழி பெயர்த்தல் தவறான புரிதலை அளிக்கும். இப்போரில் ஒரு நாட்டில் அண்ணன் தம்பியாக வாழ்பவர்கள் இருவேறு பிரிவாக பிரிந்து மோதுவதுதான் சகோதரப்போர். ரோமப்பேரரசில் தொடர்ச்சியாக பல்வேறு சகோதரப்போர்கள் ஏற்பட்டன. ஒரு போரில் சீசரின் தலைமையில் ஒரு அணியும், பாம்பேயின் தலைமையில் ஒரு அணியும் எதிர்த்து போரிட்டன. பாம்பேயின் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

புனிதம் – 5

பரிணாம தத்துவத்தின் அடிப்படையில் இன்று நாம் எதிர்நோக்கும் சிக்கல்கள் என முந்தைய பகுதியில் நான் கூறியவை இவை: இப்பொழுது மதங்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மதத்திற்கும் மேலுள்ள தன்மைகள் வேறுபடும். ஆனால் எந்த மதங்கள் மிகச் சிறப்பாக செய்கின்றனவோ, அவை பலம் பெரும், அவைப் பரிணாமப் போரில் வெல்லும். இங்கு ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. மதங்களுக்கு … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

மெய்ப்பொருள்

புளித்துப்போன கருத்துக்களை கூறுவது எனது விருப்பமல்ல. கீழுள்ள குறளில் உள்ள ஒரு முக்கியமான நுணுக்கத்தை யாரும் கண்டறியவில்லை என்றே நினைக்கிறேன்: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு. பொருள்: எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும். இனி உளவியலாளர் கார்ல் யுங்கு ( Carl … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

நக்கீரனின் பிழை

திருவிளையாடல் புராணத்தில் நக்கீரன் கூறும் “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்பது தமிழர் சிந்தனையில் பதிந்துள்ள ஆழமான தத்துவம். இது முக்கியமானது, ஆனால் இன்னொரு முக்கியமான உணரப்பாடாத தத்துவம் ஒன்றுள்ளது. அதை அறிவது முக்கியமானது என்பதால்தான் இக்கட்டுரை. இக்கதையில் நக்கீரன் செய்ததுதான் சரி, சிவன் செய்தது தவறு என்பது போன்று பெரும்பாலும் சித்தரிக்கப் படுகிறது. ஆனால் … Continue reading

Posted in Uncategorized | 2 Comments