அறிவில் எதிரும் புதிரும்

  1. புத்திசாலியான ஒன்றை உருவாக்க புத்திசாலி தேவையில்லை – இடார்வினின் பரிணாம தத்துவம்
  2. கணக்கு போட கணக்கு தெரியவேண்டிய அவசியமில்லை – டூரிங்கின் கணினி தத்துவம்
  3. ஒரு ஏரண (logical) அமைப்பால்  அதன் ஏரணத்தை நிரூபிக்க முடியாது –  கோடாலின் தத்துவம்
  4. மனிதர்களின் சுயநல செயல்பாட்டால் கூட்டு ஒத்துழைப்பை உருவாக்க முடியும் – ஆடம் சுமித்தின் பொருளாதாரத் தத்துவம்
  5. தட்டையாக இருக்கும் ஆனால் உருண்டையானது – பூமியைப் பற்றி பண்டைய கிரேக்கர்கள்
  6. பூமி நிலையாக இருக்கும், ஆனால்  அதிவேகமாக சுற்றும் – கோபர்நிக்கசின் சூரிய மையக் கொள்கை
  7. கோள்கள் இணைக்கப்படாமல்  கோடிக்கணக்கான மைல்கள் தொலைவிலிருந்தாலும்  ஒன்றை  ஒன்று ஈர்க்கும் – நியூட்டன்
  8. ஒளி அலையாகவும் இருக்கலாம் துகளாகவும் இருக்கலாம் – மாக்சு பிளாங்கு
  9. சிறந்த திட்டம் என்பது முழு திட்டமில்லாத செயல்பாடுதான் – சிக்கல் அமைப்புகள்
  10. போரிடாமலும் போராடலாம் – காந்தி

இவ்வுலகில் கடினமான சிக்கல்களைத் தீர்க்கமுடியாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம்  எதிரெதிர் துருவங்களை இணைப்பதில் ஏற்படும் கடினம்தான்.  நமது மூளை அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ளாது. அதையும் மீறி தீர்வுகளைக் கண்டுபிடித்தாலும் மற்றவர்கள் ஒப்புவதில்லை. நமது மூளையில் ஒரு மோசமான வியாதி உண்டென்றால் “இதுவா அதுவா” என்று சிந்திப்பதுதான்.  மாறாக நாம் “இதுவும் அதுவும்” என்று சிந்தித்துப் பழகவேண்டும்.

If you want the truth to stand clear before you, never be for or against. The struggle between ‘for’ and ‘against’ is the mind’s worst disease.”  – Jianzhi Sengcan

எதிரும் புதிருமான கருத்துக்களை ஒரே நேரத்தில் மனதில் வைத்துக்கொண்டு குழப்பமில்லாமல் தெளிவுடன் செயல்படுவதுதான் அதி புத்திசாலித்தனத்தின் முதல் அறிகுறி.

The test of a first-rate intelligence is the ability to hold two opposed ideas in mind at the same time and still retain the ability to function. — F. Scott Fitzgerald

This entry was posted in அறிவியல், தத்துவம், Uncategorized. Bookmark the permalink.

Leave a comment